districts

img

மயிலாடுதுறை வந்த ஆளுநர் ரவிக்கு சிபிஎம் கருப்புக் கொடி

மயிலாடுதுறை, ஜன. 17 - மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகேயுள்ள தேரிழந்தூருக்கு வந்த தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவிக்கு எதிராக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யினர் கருப்புக்கொடி காட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். கம்பர் பிறந்த ஊராக கருதப்படும் தேரிழந்தூரில் உள்ள மணிமண்டபத்தில் ஆர்.எஸ்.எஸ்-இன் கீழ் இயங்கும் ‘ஹிந்து ஆலய பாதுகாப்பு இயக்கம்’ சார்பில் “அயோத்தி ராமனும், தமிழ் கம்பனும்” என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடை பெற்றது.

மாநில சுயாட்சி மற்றும் கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிராகவும், மக்கள் விரோத போக்குடன் செயல்படும் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி இக்கருத்தரங்கில் கலந்து கொள்ள வந்தார்.  அப்போது அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து தேரிழந்தூர் செல்லும் வழியான சேத்திரபாலபுரம் கடைத்தெருவில் கருப்புக் கொடி காட்டி மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்ட னர். முன்னதாக ஆளுநருக்கு பாதுகாப்பு அளிப்பதற்காக 500-க்கும் மேற்பட்ட காவலர்கள் குவிக்கப்பட்டு தடுப்புகளை அமைத்திருந்தனர். எனினும் ஆளுநர் ரவி பகல் 12  மணிக்கு சேத்திரபாலபுரம் பகுதிக்கு வந்தபோது கருப்புக் கொடி ஏந்தி கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

கட்சியின் மயிலாடுதுறை மாவட்டச் செயலாளர் பி. சீனிவாசன் தலைமையில், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எஸ்.  துரைராஜ், ப. மாரியப்பன், சி‌. விஜய காந்த், கே.பி. மார்க்ஸ் ஒன்றியச் செயலா ளர்கள் டிஜி. ரவி, டி. துரைக்கண்ணு (மயி லாடுதுறை நகர செயலாளர்), கே. கேசவன், கே. அசோகன், மாவட்டக் குழு உறுப்பினர் கள் சி. மேகநாதன், டி. கண்ணகி, ஏ.ஆர். விஜய், பி. ராமகுரு மற்றும் ஒன்றியக் குழு உறுப்பினர்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். அப்போது போராடிய தோழர்கள் மீது  தாக்குதல் நடத்திய போலீசார், அராஜக மான முறையில் கைது நடவடிக்கையும் மேற் கொண்டனர்.

போராட்டத்தில் முன்னின்ற கட்சியின் குத்தாலம் ஒன்றியச் செயலாளர் சி. விஜயகாந்தை காவல்துறையினர் கீழே தள்ளிவிட்டு தாக்கியதில் அவர் காயமடைந் தார்.  இப்போராட்டத்திற்கு ஆதரவாக திராவிடர் விடுதலைக் கழகம், தமிழ் மண் தன்னுரிமை இயக்கத்தினரும் கலந்து கொண்டனர். போராட்டத்தில் பங்கேற்ற வர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.